தூரிகை கபிலனுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குனர் வசந்த் பாலனின் உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல பாடலாசிரியரின் மகளான தூரிகை நேற்று முன்தினம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து தூரிகையின் பெற்றோரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தினீர்களா அல்லது தூரிகை யாரையாவது காதலித்து வந்தாரா போன்ற வகையில் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தூரிகையில் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தூரிகை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் அநீதி திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக தூரிகை கபிலன் வேலை செய்தார். செய்தி கேட்டு இரவெல்லாம் மனதிற்குள் ஆந்தைகள் கத்தின. வாழ்வு ஏன் இத்தனை துயரத்தை தருகிறது என குறிப்பிட்டு இருக்கின்றார்.