இசையமைப்பாளர் அனிருத்தின் தாய் வழி தாத்தாவும் இயக்குனரும் இசையமைப்பாளருமான எஸ் வி ரமணன் காலமானார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனராக வலம் வருபவர் எஸ் வி ரமணன். இயக்குனராக உருவங்கள் மாறலாம், துரை பாபு ஷோபனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் இசையமைப்பாளராக பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட இவர் பழம்பெரும் இயக்குனர் கே சுப்பிரமணியம் அவர்களின் மகன் ஆவார். அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் தாய் வழி தாத்தா ஆவார்.
இந்த நிலையில் தற்போது இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.