இயக்குநர் சுந்தர் சி யின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Director Sundar C in Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுந்தர் சி கன்னட சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற மாயா பஜார் 2016 என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை சுந்தர் சி-யின் இணை இயக்குனரான பத்ரி என்பவர் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இப்படத்தை இயக்குனர் சுந்தர் சியின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.