இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ட்விட் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் வித்தியாசமான ஜொனரில் படங்களை இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து மோகன் ஜி-ன் பாகாசூரனில் நடித்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள twitter பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது… துணை என்பது கானல் நீர் போல நெருங்க நெருங்க தூரம் ஓடிவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.