பிச்சைக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் ஆண்டனி இல்லை என்ற விஷயத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் சசி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

முதல் பாகத்தின் வெற்றிவேல் தொடர்ந்து சமீபத்தில் பிச்சைக்காரன் படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இப்படியான நிலையில் இயக்குனர் சசி பிச்சைக்காரன் படத்தின் கதை முதலில் சித்தார்த்திடம் தான் சொல்லப்பட்டது. அவரும் கதையில் சில மாற்றங்களை சொன்னார், அதன் பிறகு இந்த கதை தனக்கு புரியவில்லை என விலகிக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தான் இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்தார். தற்போது வரை சித்தார்த்துக்கு இந்த படத்தை தவற விட்ட வருத்தம் இருக்கிறது என இயக்குனர் சசி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.