விஜய்யை குறை கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் இயக்குனர் பேரரசு.
Director Perarasu Praises Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தன்னுடைய அபரிமித வளர்ச்சியால் இன்று 100 கோடி சம்பளத்தை எட்டியுள்ளார்.
இந்தியா தற்போது கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுநாள்வரை விஜய் என்ற ஒரு நிதியையும அளிக்காதது மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
தன்னைப் பற்றி பேசியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போகும் வகையில் ரூபாய் 1.30 கோடி நிதி அளித்திருந்தார் விஜய். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் விஜய்க்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் பேரரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு விஜய்யை பாராட்டி உள்ளார்.
அந்தப் பதிவில் ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே,
மனிதர்களின் பெருங்குறை!
தளபதி தானத்தளபதி என்று
மீண்டும் நிரூபித்து விட்டார்.
திராவிடத்தை நேசிக்கும்
தமிழனாய் தளபதி மிளிர்கிறார்!
தளபதி விஜய்க்கு
தலைவணங்கி நன்றிகள் கோடி!🙏🙏🙏🙏🙏 எனக் கூறியுள்ளார்.
https://twitter.com/ARASUPERARASU/status/1252985188503531523?s=19