விஜய்க்கு மட்டும் சந்தனம் எனக்கு ரத்தமா? என பிரபல இயக்குனரிடம் அஜித் செல்லமாக சண்டையிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக சினிமாவை விட்டு பிரித்து பார்க்க முடியாத பிரபலங்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய்.
இவர்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமான நாளில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவரது ரசிகர்களின் சண்டைகளில் பட ரிலீஸ் நேரங்களில் மட்டும் தான். மற்றபடி ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்ததில்லை.
இந்நிலையில் விஜயை வைத்து திருப்பாச்சி மற்றும் சிவகாசி என இரண்டு படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. இவர் அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.
திருப்பதி படப்பிடிப்பின் போது மருத்துவமனை காட்சியில் அஜித் முகத்தில் ரத்தத்தை பூசி கொண்டு ஓடும் காட்சி படமாக்கப்பட்ட போது அஜித் ஜாலியாக விஜய்க்கு மட்டும் சந்தனம் எனக்கு ரத்தமா? என கிண்டலடித்து பேசியதாக கூறியுள்ளார்.