இயக்குனர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான வெற்றி திரைப்படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம்பெற்று இருப்பவர் மாரி செல்வராஜ். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் கர்ணன் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது பிரபல கபடி வீரர், மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டியில், இப்படத்திற்காக கடந்த சில மாதங்களாக துருவ் விக்ரம் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இப்படம் நிச்சயம் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். இவரது இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.