அருண் விஜய்யை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. அதிரடியான படங்களை இயக்குவதில் வல்லமை கொண்டவராக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கியுள்ளார். மிக விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தை செவன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ஹரி அடுத்ததாக ஜெயம் ரவி ஹீரோவாக வைத்து இதே தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி அகிலன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் மூன்றாவதாக ஹரி இயக்கும் படத்திலும் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.