பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கலாய்த்து தமிழ் இயக்குனர் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Director CS Amudhan Blast PM : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஆறாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி இந்திய மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர் இந்தியில் உரையாற்றினார்.
இந்தியில் பேசியதனால் தமிழக மக்களுக்கும் இந்தி தெரியாதவர்களுக்கும் அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. இதனால் பலர் இது குறித்து கருத்துக் கூறி வந்தனர்.
மேலும் மோடி மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேச வேண்டும் எனவும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இயக்குனர் சி எஸ் அமுதன் தான் இந்தி கற்க ஆசைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்தப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியை டுபாக்கூர் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
சிஎஸ் அமுதனின் இந்த பதிவிற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.