தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் தந்தையும் இயக்குனருமான ஏ பி ராஜ் மரணமடைந்துள்ளார்.
Director AB Raj Passes Away : தமிழ் சினிமாவில பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் சரண்யா பொன்வண்ணன். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். பிரபல மலையாள இயக்குனரான ஏபி ராஜ் என்பவரின் மகள் ஆவார்.
மலையாளத் திரையுலகில் அறுபத்தைந்து படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவருக்கு தற்போது 95 வயதாகிறது.
இந்த நிலையில் உடல்நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
ஏபி ராஜ் அவர்களின் மறைவு மலையாளத் திரையுலகிலும் சரண்யா பொன்வண்ணன் அவர்களின் குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தமிழ் மொழியில் துள்ளி ஓடும் புள்ளி மான், கைநிறைய காசு என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.