Dhoni Rest is Not Currently Excited :
இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் சுருண்டு 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் தோனியை ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறக்கியது குறித்து கருத்து தெரிவித்த விராத் கோலி, ‘ஆட்டத்தை சிறப்பான முறையில் முடிப்பார் என்ற நோக்கத்தில் தான் தோனியை 7 வது இடத்தில் களம் இறக்கினோம் என்று கூறியவர்.
தோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.
ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போது, டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான், வனிதா இல்ல – பிக் பாஸ் வீட்டுற்குள்ளேயே உண்மையை உளறிய பிரபலம்.!
போட்டி முடிந்து கோலி அளித்த பேட்டியில் இந்த கேள்வி கேட்கபட்டது- அதில் “தோனி தனது ஓய்வை குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை’’ என்றார். இதனால் எம்எஸ் தோனி ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தது ஏமாற்றம் தருவதாக கூறிய கோஹ்லி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மைதானம் இருந்தது என்றும் தெரிவித்தார்.