Dhileep Master Donates 10 Lakhs to CM Fund

நடிகர்களுக்கு இணையாக கொரானா நிதி அளித்து அசத்தியுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

Dhileep Master Donates 10 Lakhs to CM Fund : தமிழகத்தில் குரானா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேசமயம் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் இந்த மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

கொரானா நிவாரண நிதிக்காக மக்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு கோடி அளித்ததை தொடர்ந்து தல அஜித் 25 லட்சமும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சமும் அளித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் அவரது கணவரும் இணைந்து அவர்கள் நடத்தி வரும் மருத்துவர் கம்பெனி சார்பாக ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து இருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஸ்டன்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் அவர்கள் ரூபாய் 10 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் நடிகர்களுக்கு இணையாக திலீப் சுப்பராயன் மாஸ்டர் நிதி அளித்து இருப்பது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.