ரஜினியோட ஸ்க்ரீனில் சும்மா நின்றாலே போதும் எனவும் அவர் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
Dhanush About Rajini : பொங்கல் விருந்தாக வெளியான ரஜினியின் பேட்ட படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது. ரஜினியின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறுவது இதுவொன்றும் புதிதல்ல.
ஆனால் பேட்ட படத்தின் வெற்றி அவர் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் வெற்றியாக அமைந்துள்ளது. ”எங்கள் ஆதர்ச நாயகன் மீண்டு வந்துவிட்டார்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் கொண்டாடி தீர்த்தனர்.
துளியும் மேக்கப் இல்லாமல் திரிஷா வெளியிட்ட போட்டோ – நீங்க இப்படியா இருப்பீங்க?
கூடவே இப்படத்தின் முதல் காட்சியில் ரஜினி பேசும் ”வீழ்வேனென்று நினைத்தாயோ” எனும் வசனம் அவர் தன் எதிரிகளுக்கு சொன்னது போலவே இருந்தது.
இப்படி பல சிறப்புகளை கொண்ட படம் என்பதால் மறுபடியும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ரஜினி ஓகே சொல்லிவிட்டதாகவும் இப்படத்தில் தனுஷும் ஒரு ரோலில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது.
ஆனால் இதை தனுஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் ரஜினியோட ஸ்க்ரீனில் சும்மா நின்றாலே போதும் எனவும் அவர் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.