சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் செய்த வேலையை பொது மேடையில் போட்டு உடைத்துள்ளார் பிரபல இயக்குனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது மூணு படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து மெரினா படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார்.
இன்று சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக இருந்து வரும் நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசிய போது தனுஷ் சிவகார்த்திகேயனுக்காக செய்த வேலை குறித்து பேசியுள்ளார்.
அதாவது தனுஷ் தன்னிடம் சிவகார்த்திகேயன் திறமையான நடிகர். சூப்பர் ஸ்டார் ஆகும் திறமை அவரிடம் உள்ளது அவருக்கு ஏற்றபடி ஏதாவது காமெடி கதை இருந்தால் சொல்லுங்கள். அவரை வைத்து படம் பண்ணலாம் என தனுஷ் கேட்டதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். மேலும் தனுஷ் மற்ற நடிகர்கள் மீது அக்கறை கொண்டவர் என பாராட்டி பேசினார்.