எனக்கு மொதல்ல அம்மா தான் அதுக்கு அப்புறம் தான் எல்லாமே என மேடையில் பேசியுள்ள தனுஷ்.
Dhanush Emotional Speech About him Mother : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.
இந்தப் படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். தனுஷுக்கு சரண்யாவுக்கும் இடையேயான பாசப்பிணைப்பு படத்தில் பக்காவாக வேலை செய்திருக்கும்.
இப்படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய போது மேடையில் பாலா அந்த விருதை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் தனுஷ் அம்மா பிள்ளையோ என கேள்வி கேட்க, ஆமாம் எனக்கு எல்லாமே என் அம்மாதான். எது நடந்தாலும் முதலில் நான் என் அம்மாவை தான் நினைத்துக் கொள்வேன் அதன் பிறகுதான் மற்றவர்கள் எல்லாம் என பேசியுள்ளார்.
மேலும் அம்மாவை யாருக்குத்தான் பிடிக்காது? புதுப்பேட்டையில் நான் சொன்னது போலதான் நாய் பூனைக்கு கூட தான் அம்மாவைப் பிடிக்கும் என கூறியுள்ளார்.
இந்த விருது விழா வீடியோவை விஜய் டிவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.