நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்ட கவுன்சிலராக தானேஷ் முத்துக்குமார் வென்றுள்ளார்.
தமிழகத்தில் நீண்ட வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 என இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இதனையடுத்து நேற்று தேர்தல் நடந்து முடிந்த அனைத்து மாவட்டங்களில் ஒட்டெண்ணிக்கை தொடங்கி இன்று வரை நடந்தது.
இதில் அதிமுகவும் திமுகவும் கிட்டத்தட்ட சமமான அளவில் வெற்றி வாகை சூடியுள்ளன. கரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த கரூர் மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் அவர்களும் போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை 2460 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனை கரூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தானேஷ் முத்துக்குமார் அவர்கள் மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்றதற்காகவும் மென்மேலும் அரசியல் ரீதியாக உச்சத்தை அடையவும் எங்கள் குழுவினர் சார்பாக வாழ்த்துகள் தெரிவி்த்து கொள்கிறோம்