சமந்தாவும் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து கொண்டு பிரிய இருப்பதாக வெளியான தகவலுக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.

Details of Samantha Divorce Issue : பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது வரை குழந்தை பெற்றுக்கொள்ளாமல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணத்திற்கு முன்பை காட்டிலும் தற்போது அதிக கவர்ச்சியில் நடிப்பதால் கணவருக்கும் இவருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருவதாக கூறப்பட்டது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. நாகர்ஜுனா இவர் இருவரிடமும் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அது பலனளிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!

ஆனால் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இதனை வதந்தி என மறுத்து வந்தனர். கோவாவில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வருவதாகவும் தகவல் வெளியானது. சமந்தா நாகர்ஜுனா அவர்களின் பிறந்தநாளன்று தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா என உரிமையோடு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதன் மூலம் இவர்களின் விவாகரத்து குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

உறுதியானது யாருமே எதிர்பார்க்காத கூட்டணி! – மகிழ்ச்சியில் Sivakarthikeyan ரசிகர்கள் | Cinema News