Details of Lockdown Extension in Tamilnadu
Details of Lockdown Extension in Tamilnadu

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை மருத்துவ குழு முதல்வரிடம் கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Details of Lockdown Extension in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதி தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

மீண்டும் முழு ஊரடங்கு.. சின்னத்திரை படப்பிடிப்புகள் நிலை என்ன?? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்!

மருத்துவ குழுவினர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் ஊரடங்கால் மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்தி விட முடியாது. மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என கூறியுள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை போன்ற பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இன்னும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இனி கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பதும் சிக்கிக் கொள்வதும் மக்களின் கையில் மட்டுமே உள்ளது.

சூழ்நிலையை புரிந்து கொண்டு உஷாரா இருங்க மக்களே..