அருள்நிதியின் டிமான்டி காலனி 2 படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி என்னும் ஹாரர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பையும் சமீபத்தில் படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் ஓசூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.