டப்பிங் பேசி முடித்ததும் நயன்தாரா, ஜோதிகா செய்யும் அடுத்த வேலை குறித்து தீபா வெங்கட் பேசியுள்ளார்.
Deepa Venkat About Her Dubbing Secret : தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு தங்களின் சொந்த குரலில் டப்பிங் செய்து விடுவார்கள். ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது.
வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் அவர்கள் தமிழை சரியாக உச்சரிக்க முடியாது. இதன் காரணமாக அவர்களுக்கு வேறு ஒருவரே குரல் கொடுப்பார்கள்.
அப்படி நயன்தாரா, ஜோதிகா போன்றவர்களுக்கு குரல் கொடுத்து வருபவர் தான் தீபா வெங்கட். ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு குரல் கொடுக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து பல படங்களில் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தீபா வெங்கட் அளித்துள்ள பேட்டி ஒன்றில் டப்பிங் கொடுத்து முடித்ததும் நயன்தாரா, ஜோதிகா, அனுஷ்கா ஆகியோர் தவறு ஏதும் இருக்கா என பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள்.
மாற்றங்கள் ஏதாவது இருந்தால் உடனே போன் செய்து கூறுவார்கள். நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள் என கூறியுள்ளார்.