பிரபல தியேட்டரில் அஜித் ரசிகர்களால் ஏற்பட்ட அவமானத்தை ரஜினி ரசிகர்கள் ஈடுகட்டுவார்களா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் வெளிநாடுகளிலும் ரிலீஸாவது வழக்கம். பாரிசில் உலக புகழ் பெற்ற லீ கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் குறிப்பிட்ட தமிழ் படங்கள் மட்டுமே ரிலீசாகும்.
அப்படி இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்ததே ரசிகர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் திரை கிழிக்கப்பட்டது.
இதனால் அப்படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தரிடம் ரூ 55 லட்சம் அபராதம் வாங்கியது மட்டுமில்லாமல் இனி இந்த தியேட்டரில் தமிழ் படங்களும் ரிலீஸ் இல்லை எனவும் அறிவித்தது.
இந்நிலையில் நாளை வெளியாக உள்ள தர்பார் திரைப்படத்தை வெளியிட இந்த தியேட்டரை விநியோகிஸ்தர்கள் அணுகிய போது ஒரு சில கண்டிசன்களுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
தல ரசிகர்களால் இந்த தியேட்டரில் ஏற்பட்ட அவமானத்தை ரஜினி ரசிகர்கள் அமைதி காத்து ஈடுகட்டுவார்களா? என்பதே பலரின் கேள்வியும் எதிர்பார்ப்பும்.