தர்பார் நஷ்டத்தால் ஏ.ஆர் முருகதாஸ் தன்னை காத்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
Darbar Loss Issue : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது.
ஆனால் இப்படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி அவர்கள் நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர். ரஜினியையும் முருகதாஸையும் சந்தித்து நஷ்டஈடு கேட்டுள்ளனர்.
இந்த சந்திப்பில் முருகதாஸுக்கும் விநோயோகிஸ்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட விநியோகிஸ்தர்கள் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் உண்ணாவிரதம் இருப்போம் என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.
இதனால் முருகதாஸ் விநியோகிஸ்தர்கள் தன்னிடம் நஷ்டஈடு கேட்டு மிரட்டுவதாக நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.