சந்தானம், யோகி பாபு ஆகியோர் கூட்டணியின் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ள திரைப்படம் டகால்டி. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
படத்தின் கதைக்களம் :
மும்பையில் டகால்டி வேலை பார்த்து வருபவர் சந்தானம். இதே பகுதியில் மிக பெரிய பணக்காரரான சாம்ராட் தன்னுடைய கற்பனைக்கு ஏற்ப பெண்ணின் உருவத்தை வரைந்து இந்தியாவில் எந்த மூலையில் அந்த பெண் இருந்தாலும் அவரை தூக்கி வந்து அனுபவிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர். அதே போல் ராதா ரவியும் இப்பகுதியில் வில்லனாக இருப்பவர்.
சாம்ராட் ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைய அது இந்த படத்தின் நாயகியின் உருவமாக வருகிறது, உடனே இந்த ஓவியத்தை வைத்து அந்த பெண்ணை தூக்கி வருமாறு ரவுடிகளுக்கு போட்டோ அனுப்பி உத்தரவு இடுகிறார்.
இப்படியான சமயத்தில் சந்தானம் எப்படியோ ராதா ரவியிடம் சிக்கி கொள்கிறார், இவரை கொல்ல உத்தரவிட்டு விடுகிறார் ராதா ரவி. அந்த சமயத்தில் நாயகியின் போட்டோவை பார்த்து விட்டு இந்த பெண்ணை எனக்கு தெரியும். ஒரே வாரத்தில் உங்களிடம் ஒப்படைக்கிறேன் டகால்டி வேலை காட்டி விட்டு எஸ்ஸாகுகிறார்.
அதன் பின்னர் நாயகியையும் தேடி பிடிக்கிறார். இறுதியில் அந்த ரவுடி கும்பலிடம் நாயகியை ஒப்படைத்தாரா? இல்லையா? என்பது தான் கதையும் களமும்.
படத்தை பற்றிய அலசல் :
சந்தானம் வழக்கம் போல இந்த படத்திலும் காமெடி கலந்த நடிப்பால் தூள் கிளப்பியுள்ளார். அவருக்கு பலமாக யோகி பாபுவும் கலக்கியுள்ளார்.
ரித்திகா சென் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல அழகாக நடித்து கொடுத்துள்ளார்.
ராதா ரவி, சாம்ராட் மற்ற நடிகர் நடிகைகள் அவர்களின் வேலைகளை கச்சிதமாக செய்துள்ளனர்.
தொழில் நுட்பம் :
இசை :
விஜய் நரேனின் பின்னணி இசை பிரமாதம். பாடல்கள் ஓகே ரகம்.
ஒளிப்பதிவு :
தீபக் குமாரின் ஒளிப்பதிவு அழகு. ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியுள்ளார்.
எடிட்டிங் :
டி.எஸ் சுரேஷின் எடிட்டிங் கனகச்சிதம்.
இயக்கம் :
விஜய் ஆனந்த் படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதை சிறப்பாகவும் செய்து முடித்துள்ளார். இரண்டாம் பாதியில் யோகி பாபுவை மிஸ் செய்தது தான் ஒரு குறை
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் காமெடி
2. சந்தானம், யோகி பாபுவின் நடிப்பு
3.ஒளிப்பதிவு
தம்ப்ஸ் டவுன் :
வழக்கமான லாஜிக் மீறல்கள்