Cyclone Fani : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களிலும் ஆங்காங்கே பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது. மேலும் தென் மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை என்றாலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என கூறப்படுகிறது.
எனவே அடுத்த 48 மணி நேரத்தில் அது புயலாக மாறும் என்றும்,. அந்த புயலுக்கு ஃபனி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் புயல் 30ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், கரையை கடக்கும் போது தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் 27ம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம் புதுவைக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.,