குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இரண்டு சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வரும் ஞாயிறு மதியம் மூன்று மணியிலிருந்து தொடர்ந்து 5 மணி நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே சூட்டிங் நடந்து முடிந்து டைட்டில் வின்னர் ரித்திகா தான் என தகவல் வெளியான நிலையில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன.
ஸ்ருதிக்காகவை அடுத்து இரண்டாவது இடத்தை தர்ஷன் பிடித்துள்ளதாகவும் மூன்றாவது இடத்தை அம்மு அபிராமி பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது இந்த வார ஞாயிற்றுக்கிழமை தெரிந்து விடும்.