Cricket : நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் உதவியுடன் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து நார்த்தர்ன் டிஸ்ட்டிர்க்ட்ஸ் அணி வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
அந்த அணியின் பேட்ஸ் மேன்கள் ஜோ கார்டர்-பிரெட்ஹாம்ப்டன் இணை சென்ட்ரல் டிஸ்டிரிக்டிஸ் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 6 சிக்சர்கள் விளாசினர். ஆனால் எதிரணி பந்து வீச்சாளர்கள் வில்லேம் லூதிக் மேலும் நோ பால்களை வீசினார்.
மொத்தமாக ஒரே ஓவரில் 43 ரன்களை கார்டர்-ஹாம்ப்டன் இணை எடுத்து உலக சாதனை புரிந்தது.
இதற்கு முன்னதாக ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த வீரர் எல்டன் சிகும்புரா வங்க தேசத்தில் நடந்த முதல் தர ஒரு நாள் ஆட்டத்தில் 39 ரன்கள் எடுத்து இருந்த சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டு உள்ளது.