
Cricket Ball Damage :
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் உப்பு காகிதத்தை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் ஆஸ்., கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் மீது சிஏ ஓராண்டு தடை விதித்தது.
இதற்கிடையில் அந்த ஓராண்டு கால தடை நீண்ட கால தடையாகும் அந்த கால இடைவெளியை குறைக்குமாறு வீரர்கள் சங்கம் கோரியது.
இப்பிரச்சனை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டு சுயேச்சையான குழுவும் சிஏ நிர்வாகத்தை கடுமையாக சாடியிருந்தது.
இதனால் சிஏ தலைவர் டேவிட் பீவர், சிஇஓ ஜேம்ஸ் சதர்லேண்ட், இயக்குனர் மார்க் ஆகியோர் தங்களில் பதவியை ஏற்கனவே ராஜிநாமா செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக அணி முன்னாள் பயிற்சியாளர், செயல் திறன் தலைவர் ஆகியோரும் பதவி விலகினார்.
தற்போது கிரிக்கெட்ஆஸ்திரேலியா அமைப்பின் புதிய சிஇஓ-வாக கெவின் பொறுப்பேற்றுள்ளார். சிஏ தனது புதிய அத்தியாயத்தை தொடாகியது. தற்போது கிரிக்கெட் ஆட்டத்துக்கு புதிய தொடக்கமாக இருக்கும்.