நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளது சினிமா பத்திரிகையாளர் சங்கம்.
CPS Wishes to Pandavar Team : தமிழ் சினிமா தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பல மாதங்களுக்கு முன்னர் நடந்த முடிந்த நிலையில் அதை ஓட்டு எண்ணிக்கை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆண்டவர் அணியினர் அனைவரும் முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் பாண்டவர் அணியில் போட்டியிட்ட அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாண்டவர் அணியினருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர் , செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன், மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பில் அதன் தலைவர் D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S.கார்த்திகேயன் , பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத் தலைவர் சுகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டி உள்ளனர்.
கலக்கல் சினிமாவும் நடிகர் சங்கத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாண்டவர் அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.