cow
மாடு ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மதித்து சாலையில் நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Cow following traffic rules viral video – சாலைகளில் விபத்துக்கள் மற்றும் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறு நகர மற்றும் கிராமங்களில் அதை யாரும் பின்பற்றுவதில்லை. அவ்வளவு ஏன்?.. சென்னை, டெல்லி, கோவை போன்ற பெரிய நகரங்களில் கூட பலரும் அதை பின்பற்றாமல் சென்று போக்குவரத்து துறை காவலர்களிடம் அபராதம் கட்டுவதை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்நிலையில், சாலையில் ஒரு மாடு ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மதித்து மற்ற வாகனங்களுக்கு நடுவே அமைதியாக நிற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘மாடுகள் கூட போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கிறது… மனிதர்களுக்கு மாடுகள் எவ்வளவோ மேல்… விலங்குகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது’ என பதிவிட்டு வருகின்றனர்.