தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
COVOD19 Update 25.08.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று கொரானாவால் 5,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு – சுகாதாரத்தறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!
இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 6,998 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இன்று 107 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,721 ஆக உயர்வு.
தமிழகத்தில் 52,128 மட்டுமே கொரானா பாதிப்புக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.