தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
COVOD19 Update 13.08.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று 5,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
கொரோனா தடுப்பு ஊசியை வெளியிட்ட முதல் நாடு ரஷ்யா!
இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,61,459 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5146 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இன்று 119 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,397 ஆக உயர்வு.
இதுவரை தமிழகம் முழுவதும் 34 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.