தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
COVID 19 Update 14.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 4,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூலை 31ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரானா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் மதுரை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
மேலும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு 45 நிமிட ஆன்லைன் வகுப்பு என இரண்டு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.