COVID19 Update 04.07.20
COVID19 Update 04.07.20

நேற்றைப் போலவே இன்றும் தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID19 Update 04.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 4,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடைசி 16 நாட்களில் மட்டும் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. இன்று 65 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 1450 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

என்னுடைய எனர்ஜி மட்டும் இல்லை எல்லாமே இந்த 6 பேர் தான் – தளபதி விஜய் ஓபன் டாக் (வீடியோவுடன் இதோ)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தற்போது மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் ஜூலை 6 முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களில் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவது மட்டுமே திருப்தி அளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.