தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.
COVID 19 Update 29.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று 6,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,72,883 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5927 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இன்று 82 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,741 ஆக உயர்வு.
58,818 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 13 லட்சம் பேர் கொரானா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.