COVID 19 Update 10.07.20
COVID 19 Update 10.07.20

தமிழகத்தில் மீண்டும் கொரானா பாதிப்பு குறைந்ததுள்ளது. இன்று மீண்டும் கிடுகிடுவென குணமுடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

COVID 19 Update 10.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 4163 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இன்று 65 பேர் பலியானதால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1829 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த இடத்தில் டாட்டூ, அச்சு அசலாக சன்னி லியோன் போலவே இருக்கும் ரேஷ்மா – வைரலாகும் வீடியோ!

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக கொரோனாவை குணப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி ஓமந்தூர் திருச்சி சேலம் கோவை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 14 நாட்களுக்குப் பின்னர் பிளாஸ்மா தானம் செய்யலாம். பிளாஸ்மா தானம் செய்ய தானாக எவ்வித பயமுமின்றி உன் வரலாம் என கூறியுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் கேபி அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோருக்கு குரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.