சூரரைப் போற்று பாடலில் ஜாதி ரீதியான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Court Verdict on Soorarai Pottru Case : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க அபர்ணதி பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து மாறா தீம் மியூசிக், மண்ணுருண்ட, காட்டு பயலே, போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவற்றில் மண்ணுருண்ட பாடலில் ஜாதி ரீதியான வரிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்தப் பாடலால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் 2022 ஆம் ஆண்டு வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
வெளியானது சூரரைப்போற்று பட அப்டேட் – ரசிகர்கள் உற்சாகம்.!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தப் புகாரை சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? படத்திற்கு சிக்கல் ஏற்படுமா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.