சென்னை பள்ளிக்காரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Councillor jayagopal admitted in hospital – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல கட்சிகள் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். மேலும், சாலையில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இனிமேல் பேனர் வைத்தால்… ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்தே, கைதுக்கு பயந்தே அவர் நாடகமாடுகிறார் என சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். ஜெயகோபாலின் மகளின் திருமணத்திற்கு ஓ.பி.எஸ் உள்ளிட அதிமுக பிரமுகர்களை வரவேற்க ஜெயகோபால் இந்த பேனர்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.