இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
Corona Virus Update in Tamil Nadu : சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ருத்ர தாண்டவமே ஆட தொடங்கியுள்ளது.
ஆரம்பத்தில் சிறிய அளவிலான பாதிப்பையே பெற்றிருந்த தமிழகம் அடுத்தடுத்த தினங்களில் உச்சத்தை எட்ட தொடங்கியது. நேற்று வரை மொத்தம் 309 பேர் பாதிப்படைந்து இருந்ததாக கூறப்பட்டிருந்தது.
கொரானா பீதிக்கு நடுவிலும் சத்தம் இல்லாமல் நடக்கும் மாஸ்டர் வேலைகள் – அப்போ விரைவில் ட்ரீட் இருக்கு.!
இந்த நிலையில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் 102 பேருக்கு குரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த அவர்களின் மொத்த எண்ணிக்கை 411-ஐ தொட்டுள்ளது.