Corona Virus Shutout : சமீபத்தில் கொரோனா தாக்கத்தால் பாமர மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்களும் அமைச்சர்கள் தொடங்கி ஆளுநர் வரை பாதிப்புக்குள்ளாகினர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா தடுப்பு பணியாற்றும் இவர், தான் செல்லும் இடமெல்லாம் கழுத்தில் ஒரு நீல நிற அட்டையை ஐடி கார்ட் போன்ற வடிவில் அணிந்து கொள்கிறார்.
மக்களே உஷார்.. கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் 2 லட்சம் வரை அபராதம் – தமிழகத்தில் பரபரப்பு உத்தரவு
அது என்னவென்றால், அந்த அட்டையை அணிந்திருந்தாள் சுற்றியுள்ள கொரோனா வைரஸ் அது அழிக்க வல்லதாகவும், அதில் குளோரின் டை ஆக்ஸைடு பவுடர் வடிவில் இருப்பதாகவும் தெரிகிறது.
இது ஒரு சீன தயாரிப்பாகும். இதனுடைய விலை 150 முதல் 1500 வரை இருக்கும். ஆனால் அதிக தகவல் ஒன்றும் வெளியாகவில்லை இருந்தபோதிலும் அமைச்சர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.