Corona Virus Death in Tamil Nadu
Corona Virus Death in Tamil Nadu

கொரானா வைரஸினால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆகியுள்ளது.

Corona Virus Death in Tamil Nadu : சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரசின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிகபட்சமாக 413 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கொரானா வைரஸ்.. மௌனம் காக்கும் விஜய், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் – என்ன செய்துள்ளார்கள் பாருங்க.!

இந்த 413 பேரில் கிட்டத்தட்ட 90% டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் தான். இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த 51 வயதான தலைமையாசிரியர் ஒருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாகி உள்ளது.

இவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய இஸ்லாமியர் தான் என தெரிய வந்துள்ளது.