பத்து ரூபாயில் கொரானா சிகிச்சை அளித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் மற்றும் சித்த வைத்தியரான வீர பாபு.
Corona Treatment for Just 10 Rupees in Chennai : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஐம்பது இலட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த கரானா வைரஸ் தொற்றுக்காக அரசு, தனியார் மருத்துவமனை, சித்த வைத்தியம் என பல்வேறு முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த வீரபாபு என்ற வைத்தியரும் ரஜினி ரசிகருமான இவர் சென்னை சாலிகிராமத்தில் வெறும் பத்து ரூபாய்க்கு தினந்தோறும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இவருடைய சிகிச்சையால் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் சென்னையில் சாலிகிராமத்தில் பத்து ரூபாய் மருத்துவமனை ஒன்றை இன்று திறக்க உள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் இவரின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.