தமிழக அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் தரமான சிகிச்சையால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
Corona Recovery Rate in Tamilnadu : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நான்கரை லட்சத்தை தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்திய அளவில் அதிகமான பரிசோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது.
அதேசமயம் இந்த கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 5,820 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 4,04,186 பேர் பூரண குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழக அரசு மருத்துவர்களின் தீவிர முயற்சியால் நாளுக்கு நாள் கொரானா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.