Congress Team
Congress Team

Congress Team – டெல்லி: பெரிய மோடியான நரேந்திர மோடி தூங்கி கொண்டிருந்த போது சிறிய மோடியான நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

ரூ.20,306 கோடி கொள்ளையடித்த நிரவ் மோடி 2018 ஆண்டு நாட்டை விட்டு தப்பியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

எனினும் அதே ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி சுவிச்சர்லாந்து சென்ற போது, நரேந்திர மோடியுடன் நின்று, நிரவ் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

எனவே 2018 நவம்பர் வரை உலங்கெங்கும் சுற்றி கொண்டிருந்த நிரவ் மோடி, அதற்கு பிறகு லண்டனுக்கு சென்றதாகவும் அங்கு அவர் சுற்றி திரிவதை அந்த நட்டு பத்திரிகைகள் தெரிவித்து இருந்ததாகவும் அதற்கு பிறகு நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்நிலையில் நிரவ் மோடி மீது இவ்வளவு காலமாக நடவடிக்கை எடுக்காமல் பெரிய மோடி( பிரதமர் நரேந்திர மோடி) தூங்கிவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் தொழிலதிபர் நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் இவ்வாறு கடுமையான விமர்சனத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.