திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
*ராகுல் காந்தியின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியா வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
*ராகுலின் பிரச்சாரம் கூட்டணி பேச்சு வார்த்தையில் தி.மு.கவிடம் காங்கிரஸ் அதிக இடங்களை பெறுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
*தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் அதிருப்தியுடன் உள்ளது காங்கிரஸ் கட்சி.
*40க்கும் குறைவான தொகுதிகளை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த காங்கிரஸ்க்கு, 15 முதல் 18 வரை மட்டுமே வழங்க முடியும் என்று தி.மு.க கூறியுள்ளது.
*கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் ராகுல் காந்தி காமராஜரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
*தி.மு.கவின் பிடிவாதம் காங்கிரஸ் கட்சி கூட்டணியை ”மறுபரீசலனை செய்யலாம்” என்ற முடிவை எட்டியுள்ளது.
*கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
*12 இடங்கள் வரை கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க வெறும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
*அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிட்டது.
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சு வார்தையின் போதும் தி.மு.க பிடிவாதம் காட்டியதால் பேச்சு வார்த்தையிலிருந்து வெளியேறியுள்ளது.
*தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்தையில் இழுபறி நீடிப்பதோடு, கட்சிகள் கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
*ராகுல் காந்தியின் கடந்த மூன்று நாட்கள் பிரச்சாரங்களில் தி.மு.க குறித்தோ! கூட்டணி குறித்தோ! பேசாதது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.