Commonwealth Games Table Tennis :
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மோதின. இதில் இந்திய அணி 3-2 என இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் அணி பைனலில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
அரைவயிறு தரும் ஆற்றல், ஆய்வின் மூலம் அறிந்து கொள்வோமா?
*சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம் :
இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சிந்து (5வது ரேங்க்) 21-14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
அதே வேகத்துடன் 2வது செட்டிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-14, 21-7 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இப்போட்டி 44 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. அரை இறுதியில் 2ம் நிலை வீராங்கனை சென் யூ பெய்யுடன் (சீனா) சிந்து மோத உள்ளார்.
சென் யூவுடன் மோதியுள்ள போட்டிகளில் சிந்து 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும், ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரின் நடப்பு சாம்பியனான சென் யூ நல்ல பார்மில் இருப்பதால், அரை இறுதியில் சிந்துவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.