College students protest
College students protest

College students protest – சென்னை: பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த விவகாரத்தை அடுத்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள்,சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையும் வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள்,இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கல்லூரி மாணவர்களும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.