கல்லூரி பேராசிரியருடன் நட்பாக பழகி அவரை மிரட்டி நிர்வான வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
College student who threatning lady professor arrested – ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவேஷ்(23) சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அதோடு, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பும் படித்து வருகிறார்.
அதே பல்கலை கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த 25 வயது இளம்பெண் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறர். இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருவரும் நட்புடன் பழகினர்.
இந்நிலையில், படிப்பு முடிவடைவதை காரணம் காட்டி ஒரு பார்ட்டி தருவதாக கூறி அப்பெண்ணை விவேஷ் வெளியே அழைத்துள்ளார்.
ஒரே மாநிலத்தை சேர்ந்தவர் மற்றும் தன்னை விட வயது குறைந்த மாணவர் என்பதால் அப்பெண்ணும் தைரியமாக வர சம்மதித்துள்ளார்.
ஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ
கடந்த 19ம் தேதி இரவு 7 மணியளவில் அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் விவேஷ் பயணித்துள்ளார்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அருகே இருளான பகுதியில் வாகனத்தை அவர் திருப்பியுள்ளார். இங்கே எதற்கு என ஆசிரியை கேட்ட போது இங்கே ஒரு விடுதி இருக்கிறது.
இங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் எனக்கூறி, சவுக்குரம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பயம் ஒரு பக்கம் இருந்தாலும் அவரை நம்பி அப்பெண்ணும் சென்றுள்ளார்.
யாருமில்லாத இடத்திற்கு சென்றதும் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி உடைகளை களையுமாறு பேராசிரியரை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கண்ணீர் விட்டு கதறி தன்னை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். ஆனாலும், இரக்கம் காட்டாத விவேஷ் அவரை நிர்வாணப்படுத்தி தனது செல்போன் வெளிச்சத்தில் வீடியோ எடுத்தார்.
அதன்பின் இதுபற்றி வெளியே கூறினால் வீடியோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி அவரை அழைத்து சென்று அவர் தங்கும் விடுதியில் விட்டு விட்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலை அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது இச்சைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன அப்பெண் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் திட்டப்படி கோயம்பேடு பகுதிக்கு நிவேஷை ஆசிரியை வரவழைத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் விவேஷை பிடித்தனர். மேலும், அவரது செல்போனில் எடுத்த வீடியோவை அழித்தனர்.
சர்கார் படமே வெளியே வந்திருக்காது – விஜயை மிரட்டும் அதிமுக அமைச்சர்
ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் புகார் அளிக்க மாட்டார் என்கிற தைரியத்தில் இப்படி செய்துவிட்டதாக போலீசாரிடம் விவேஷ் வாக்குமூலம் அளித்தார். அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.