CM Statement on Corona Status in Tamil Nadu
CM Statement on Corona Status in Tamil Nadu

சென்னையில் கொரானா கட்டுக்குள் கொண்டு வந்தது எப்படி எனவும் மற்ற மாவட்டங்களின் நிலை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

CM Statement on Corona Status in Tamil Nadu : உலகையே அச்சுறுத்தி உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் நோய்ப் பரவலை தடுப்பதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில், அதிக அளவு இருந்த கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த ஆலோசனைகளை ஏற்று, மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த சரியான நடவடிக்கைகளின் காரணமாக, படிப்படியாக இந்த நோய்த் தொற்று குறைந்து கொண்டிருக்கின்ற நிலையை பார்க்கின்றோம். சென்னை, மக்கள் அதிகம் வாழுகின்ற ஒரு மாநகரம். மேலும், இங்குள்ள குறுகலான வீதிகளில் நெருக்கமான வீடுகள் இருக்கின்றன.

சென்னை மாநகரத்தில் அதிக நபர்கள் வசிக்கின்ற காரணத்தினால், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த நோய்த் தொற்று எளிதாக பரவி விடுகிறது.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலமாக இந்த நோய்த் தொற்று குறைக்கப்பட்டிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் சுமார் 25,532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 500 முதல் 600 வரையிலான முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை அலசும் ராம்கோபால் வர்மாவின் Naked.!

அதேபோல 20,000 பணியாளர்களை வைத்து சென்னை மாநகரத்தில் வீடு, வீடாகச் சென்று, ஒரு வீட்டிற்கு 10 முதல் 12 முறை சென்று, மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இருக்கின்றதா என்பதைக் கேட்டறிந்து, அப்படி அறிகுறி தென்படும் பட்சத்தில், அவர்களை பரிசோதனைக்குட்படுத்தி, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதனால், நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல காய்ச்சல் முகாம் நடத்தியதன் விளைவாக, சென்னை மாநகரத்தில் மட்டும் 14.5 லட்சம் நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகத் தான் சென்னை மாநகரத்தில் நோய்ப் பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் 1,196 நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் இடங்களில் உள்ளவர்களை பரிசோதனை செய்து, நோய் அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்ததன் விளைவாக இந்த நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியே வராமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கின்ற இடத்திற்கே சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

சென்னை மாநகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரத்தில் குடிசை பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு சென்னை மாநகராட்சி மூலமாக முகக்கவசம் வழங்கப்பட்டிருக்கின்றது

அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டுமென்று அரசு முடிவெடுத்து, திட்டத்தையும் நாங்கள் துவக்கி வைத்திருக்கின்றோம்.

முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் வசிக்கின்ற மக்களுக்கு நியாயவிலைக் கடை மூலமாக நபர் ஒருவருக்கு 2 முகக்கவசங்கள் வழங்குவதாக முடிவெடுத்து, ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மாவின் அரசும், தனியாரும் இணைந்து தமிழ்நாட்டில் 119 பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்தி, இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை நிலையங்கள் உள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. நேற்றைய தினம் கூட 60,794 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். நம் மாநிலத்தில் இதுவரை 25,36,660 பரிசோதனைகள் செய்யப்பட்டு, இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகள் செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கின்றது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114. மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, மருத்துவ நிபுணர்கள் அளித்த ஆலோசனைகளை பின்பற்றி, நமது மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததன் விளைவாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,72,883 ஆக உள்ளது. இதுவரை 3,741 நபர்கள் இறந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தமாக இறப்பு 1.6 சதவிகிதம், சென்னையில் 2.1 சதவிகிதம். இந்தியாவிலேயே தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மருத்துவ ஆலோசனைக் கூட்டத்தில் இடம் பெற்றிருக்கும் மருத்துவ நிபுணர்கள் தங்களுடைய கருத்துக்களை வழங்குகின்றீர்கள்.

சமூகத்துக்கும் எனக்கும் கொரோனா கற்றுக்கொடுத்த பாடங்கள் – நடிகை சுபிக்க்ஷா வெளியிட்ட வீடியோ

அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் மாண்புமிகு அம்மாவின் அரசு மருத்துவர்களின் மூலம் சிகிச்சை அளித்து கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணமடையச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், நீங்கள் கூறுகின்ற ஆலோசனையின்படி, நோய் தடுப்புப் பணிகளிலும் நாங்கள் ஈடுபட்டிருக்கின்ற காரணத்தால், சென்னை மாநகரத்தில் படிப்படியாக இந்த நோய்த் தொற்று குறைந்திருக்கின்றது.

பிற மாவட்டங்களிலும் படிப்படியாக இந்த நோய்த் தொற்று குறைவதற்கான அறிகுறி இருந்து கொண்டிருக்கின்றது. பிற மாவட்டங்களிலும் இதேபோல் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. அங்கு தேவையான படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை மாண்புமிகு அம்மாவின் அரசு செய்து கொடுத்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள் அரசின் அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்து தங்களுடைய மேலான கருத்துக்களை வழங்கியிருக்கின்றீர்கள். அந்த கருத்துக்களின்படி அரசு செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.