கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
CM Request to PM About Semester Exam : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தடுப்பது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்திமுடிக்க வேண்டும் என யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
சூரரைப் போற்று ட்ரைலர் ரிலீஸ் குறித்து வெளியான தகவல், சாதனை படைக்க தயாராகும் ரசிகர்கள்!
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது இயலாத காரியம்.
இதனால் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இல்லையெனில் சூழ்நிலைக்கேற்ப மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.